- Details
- Parent Category: Top Menu
சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026
சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026 பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப் பொருளில் 2026. 03.11ம் திகதி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ் எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
- Details
- Parent Category: Top Menu
78வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
இலங்கையின் 78வது சுதந்திர தினம் (04.02.2026) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது.


- Details
- Parent Category: Top Menu
2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டின் கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளாகிய சனவரி மாதம் 01 ஆம் திகதி ஏறாவூர் பிரதேச செயலகத்தில் சகல ஊழியர்களினதும் பங்குபற்றலுடன் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டின் கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளாகிய சனவரி மாதம் 01 ஆம் திகதி ஏறாவூர் பிரதேச செயலகத்தில் சகல ஊழியர்களினதும் பங்குபற்றலுடன் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு வினைத்திறனுடைய மற்றும் பயனுறுதியுள்ள அரச சேவை ஒன்றினை வழங்குவதற்காக ஒட்டுமொத்த அரச சேவையும் அதற்காக திடசங்கட்பத்துடன் அர்ப்பணிக்க வேண்டியுள்ளமையினால் குறித்த தினத்தில் வழங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் அலுவலக முன்னரங்க சேவைகள் குறித்த மக்களது எண்ணங்கள் அல்லது கருத்துக்களைக் பதிவிடுவதற்கான QR code முறைமையிலான படிவ அமைப்பு அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.

- Details
- Parent Category: Top Menu
Green Eravur வேலைத்திட்டத்தின் கீழ் மர நடுகை நிகழ்வு
Green Eravur வேலைத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய ஏறாவூர் புன்னைக்குடா வீதி, ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயம், மற்றும் தோனாக்களிலும் மரம் நடுகை இடம் பெற்றன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எமது செயலக அனைத்து உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மரம் நடுகை நடைபெற்றது.

- Details
- Parent Category: Top Menu
முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” 30.10.2025 ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, 30.10.2025 வியாழக்கிழமை காலை10.30 மணியலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வின்போது அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றதலுடனும் இடம் பெற்றது.


















