2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2025.01.01 இன் #கிளீன்_சிறீலங்கா (Clean srilanka) தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழா உடன் இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக ஒலி/ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரச ஊழியர்கள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் நிகழ்வில் சமர்ப்பிக்கபட்டது.















