Print
Parent Category: Top Menu


WhatsApp Image 2020 10 16 at 12.24.34 PM

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் அதிகாரப்பரப்பிற்குட்பட்ட பரப்பில் வாழும் கைத்தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் 264 பயனாளிகளுக்கு கைத்தொழில் உபகரணங்கள் 21.10.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டன.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மேற்கொள்ளும் நன்வெமு ஸ்ரீலங்கா தேசிய தொழில் முயற்சி வேலைத்திட்டத்தின் கீழ் 5,555,447.00 பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. MAH.சிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் திரு. SA. றஹீம் ஆகியோர் பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

 

 

FaLang translation system by Faboba